Friday, December 17, 2010

இரங்கல் அல்ல, உறுதி ஏற்பு!

                            தெறித்து விழும்  சொற்கள்
                                எரித்து விடும் ஆரியத்தை
                            பறித்து விடலாம்  இயற்கை
                                உம்மை எம்மிடமிருந்து - ஆனால்,
                            அரித்து விடவா முடியும அவைகளால் உம் கருத்தை

                            கோடை நிழலே,
                                கொள்கை அழலே!
                            அருவருக்கும் ஆரியத்தை
                                கருவறுக்கும் அருமருந்தே!
                            தனித் தமிழ் விருந்தே!

                                அறிவாற்றலில் உம்
                            அருகே நிற்கும் அருகதை பெற்றேன் இல்லை- ஆயினும்
                                ஒழுக்கத்தில், நாணயத்தில் உம்மை
                            ஒத்து நிற்க எம்மால் இயலும்.

                            அந்தத் துணிச்சலில் ஒழுக்கமுடையோர்
                                யாவரும் ஒன்று சேர்ந்து கூறுவோம்!
                            இன்னும் இறையனார் இறக்கவில்லை...
                                யாம் இறையனாரின் தொடர்ச்சி.....   

                            போர்க்களத்தில் ஒப்பாரியா?
                                இரங்கல் தெரிவிக்கவா வந்தோம்?
                            இல்லை, இல்லை உம்வழியில் நடப்போம் என
                                உறுதி ஏற்கவே வந்தோம்!!.

                                                    -   க.ச. பெரியார் மாணாக்கன்






No comments:

Post a Comment